Thursday, May 28, 2020

பறவைகளின் ஆறுதல்!

பூங்கா முழுதும் வெறிச்சோடி இருக்கிறது!
ஆங்காங்கே உள்ள மரத்தில் பறவைகள்
பாடும் குரல்களோ மாந்தரைக்  கூப்பிட்டு
நாடிவரும் பிஞ்சுக் குழந்தைகள் கூட்டமெங்கே?
காலை நடைப்பயிற்சி செய்கின்ற மக்களெங்கே?
காரணம் தேடி அலைகின்றோம் யார்சொல்வார்?
யாரோதான் பேசுகின்றார் ஏதோ கொரோனாவாம்!
தாரணியே இங்கே முடங்கியதாம்! சொல்கின்றார்!
ஆறுதலாய்ப் பாடுகிறோம்  சேர்ந்து.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home