Sunday, June 28, 2020

திரைப்பட விதி!

விதி 1.

முதலில் அடிப்பவர் வில்லன்! இரத்தம்
சிதறுவதைப் பார்த்ததும் நாயகன்  துள்ளித்
துடித்தேதான் வில்லனைத் துவம்சம் புரிவார்!
அடிப்பதும் வாங்குவதும் எல்லாம் நடிப்பு!
துடிப்பார் ரசிகர்கள் பார்த்து.

விதி 2

அடிகளை  வாங்குவார் நாயகன்! சோர்ந்து
பிடிமானம் இன்றி விழுவார்! எழுந்தே
அடிகொடுங்கள்! நாயகி சொன்னதும்  வீரம்
வெடிக்க நிலைகுலைந்த நாயகன் அங்கே
மலைபோல் எழுந்து விளாசி எறிவார்!
கலையுலகம் ஏற்கும் விதி.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home