Monday, September 28, 2020

தனிமையும் சுவரும்

 மேல்சுவரும் தனிமையுமே வாழ்க்கை! 


ஒவ்வொரு நாளும் மருத்துவக் கூடத்தில்

கண்ணிரண்டும் மேல்சுவரைப் பார்த்தே அசையாமல்

அங்கே படுத்திருக்கும்  அந்த மனிதனை

எண்ணினால் நாம்வாழும் வாழ்க்கை நலமானது!

பொன்னும் பொருளும் அவரைத்தான் மீட்காது!

என்ன இருந்தும் அனுபவிக்க ஏலாது!

இங்கே திரையரங்கில் பத்து மணித்துளிகள்

அந்தச் சுவரையே காட்டுவதைப் பார்ப்பதற்கு

நம்மால் பொறுமையுடன் பார்க்க முடியவில்லை!

இந்த மனிதனோ என்றும் அசையாமல் அங்கிருக்கும் மேல்சுவரை மட்டுமே

பார்க்கவேண்டும்!

என்ன கொடுமையோ? இத்தகைய வாழ்நிலை?

அந்த நிலைதன்னை ஒப்பிட்டால் நாமிங்கே

என்னநிலை என்றறிவோம் பார்.


மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home