Saturday, November 28, 2020

2.வான்சிறப்பு

 குறளுக்குக் குறள்வடிவில் பொருள்

2.வான்சிறப்பு

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்றென்றார் வள்ளுவர்!

வான்மழை இவ்வுலகைக் காப்பதால் 

அம்மழை

தேனமிழ்(து)  என்றேதான் செப்பு.

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழையென்றார் வள்ளுவர்!

பெய்தே உணவைத் தருகிறது

தானுமிங்கே

நன்னீர் உணவாகும் சொல்.

குறள் 13:

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசியென்றார் வள்ளுவர்!

முக்கடல் நீரிருந்தும் வான்பொய்த்தால் நம்பசியோ

பற்றித் துடிக்கவைக்கும் பார்.

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் காலென்றார் வள்ளுவர்!

வான்மழை பொய்த்தால்  உழவுத்

தொழில்கூட

தேன்மொழியே! குன்றிவிடும் கூறு.

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழையென்றார் அய்யன்!

கெடுக்கும் உயிரின வாழ்வைத்தான் பொய்த்து!

கொடுக்கும் வளத்தைத்தான் பெய்து.

குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிதென்றார் அய்யன்!

மழைத்துளி பெய்தால் பசும்புல்  தழைக்கும்!

மழைபொய்த்தால் புல்முளைக் காது.

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடினென்றார் அய்யன்!

கொடுக்கின்ற வானியல்பு பொய்த்தால் கடல்நீர்

கடுகளவாய் வற்றிவிடும் காண்.

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டென்றார் அய்யன்!

முறைமழை பொய்த்தால் விழாக்கள்,

பூசை

நடக்காமல் தேங்கிவிடும் செப்பு.

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனினென்றார் வள்ளுவர்!

வான்மழை பொய்த்தால் வழங்குகின்ற தானமும்

ஏற்கும் தவமும் அரிது.

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கென்றார் வள்ளுவர்!

யாரெனினும் நீரின்றி வாழ்தல் அரிதாகும்!

நீரோ மழைபெய்தால் தான்.

மதுரை பாபாராஜ்

குறள்நெறிக் குரிசில் சி.ஆர்.வாழ்த்து

புது வடிவம்.. 

புதுவெள்ளம்..

புதிய 

குறள் மேல்வைப்பு நூல்..

 வாழ்த்துகள் பாபா.. 

புகுந்து விளையாடுங்க 👍😊💐

0 Comments:

Post a Comment

<< Home