Friday, November 27, 2020

1. கடவுள் வாழ்த்து

 குறளுக்குக் குறள்வடிவில் பொருள்


1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகென்றார் அய்யன்!

அகரம் மொழிக்கு முதலாம்! இறையோ

உலகின் முதலென் றறி.

2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனினென்றார் வள்ளுவர்!

கற்றும் பணிவின்றி சான்றோர்முன் பண்பிழந்தால்

சற்றும் பயனில்லை சாற்று.

குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இலயென்றார் வள்ளுவர்!

வேண்டியோர் வேண்டாதோர் பாராத சான்றோரைப்

போற்று, துயரில்லை இங்கு.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வாரென்றார் அய்யன்!

நெறிபிறழ்வே இன்றியே ஐம்புலனை ஆட்கொள்!

ஒழுக்கம் நிமிரவைக்கும் சொல்.

குறளுக்குக் குறள்வடிவில் பொருள்

குறள் 7:

தனக்குவமை  இல்லாதான் தாள்சேர்ந்தார்க்  கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிதென்றார் அய்யன்.

இணையற்ற சான்றோர் வழிநடந்தால்

தீரும்

மனக்கவலை மக்களுக்குத் தான்.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தாரென்றார் அய்யன்!

நெறிபிறழாச் சான்றோர் வழிமறந்தால் 

நீந்த

முடியாது துன்பக் கடல்.

மதுரை பாபாராஜ்



மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home