Wednesday, November 25, 2020

நிவர்புயல் அரசுக்கும் முன்களப் பணஅனைவருக்கும் நன்றி!

 நிவர் புயல் 

முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி!



உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.


புயல்வெள்ளம் பாராமல் மக்களைக் காக்கும்

களப்பணி யாளர் அனைவருக்கும் நன்றி!

பலவாறு சிந்தித்து தன்னல மின்றிப்

பொதுநலத் தொண்டில் பம்பரம்போல் சுற்றிச்

சுழன்றே கடமைகள் நேயமுடன் செய்தார்!

கழன்றுவிழும் ஆடையைக் காக்கும் கரம்போல்

விழிப்புடன் காத்தவரை வாழ்த்து.


முதல்வர் முதலாய் அமைச்சர்கள் நின்று

கடமைகள் ஆற்றினர் எச்சரிக்கை தந்தே!

எதிர்க்கட்சி, ஆர்வலர்கள்  எல்லோரும்  வந்தே

துணைநின்றார் மக்களுக்கு! ஊர்கூடித் தேரை

இழுத்தனர் பங்கெடுத்து தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home