Wednesday, November 25, 2020

வருகிறது நிவர்

 வருகிறது நிவர்!


25.11.20


மழைபெய்யும் காரணத்தால் பூங்கா

மரத்தில்

அழகாய்ப் பறவைகள் வந்தே ஒலிகள்

இசைக்கும் 

நிலைமாறி இங்கே தவளைகள் கூட்டம்

ஒலியெழுப்பும் கோலமாச்சு பார்.


பூங்காவில் தண்ணீரோ தேங்கி நிறைந்திருக்க

ஆங்காங்கே வீடுகளின் பின்புறம் நீர்த்தேக்கம்!

தேங்குகின்ற தண்ணீர் பெருகித்தான் வீட்டுக்குள்

போகத் துடிக்கிறதே பார்.


தெருவில் முழங்கால் அளவில் மழைநீர்!

பெருமூச்சு விட்டேதான் மின்சாரம் இன்றி

ஒருவாழ்க்கை காணும் அனுபவத்தில் இன்று!

வருமாம் புயல் நிவர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home