Monday, November 23, 2020

நிவர் புயல்! நகர்ந்தால் நலம்!

 நிவர் புயல்! நகர்ந்தால் நலம்!



எப்படித் தாக்குமோ? எங்குவந்து தாக்குமோ?

அப்படியே தாக்கினால் என்னென்ன செய்யவேண்டும்?

இப்படியும் அப்படியும் சிந்தித்தே எச்சரிக்கை

மக்களுக்குச் செய்கின்றார்  செப்பு.


கனமழை பெய்யுமோ?  வன்புயல்தான் வீசி

மனக்கலக்கம் அச்சத்தை ஏற்படுத்த லாமோ?

மனைவீடு தாழ்வுப் பகுதிகள் எல்லாம்

அணையுடைத்த வெள்ளமாகு மோ?


பேரிடர் மீட்புக் குழுவும், அமைச்சர்கள்

நாளிதழ், ஊடகங்கள், கட்சிகள் எல்லோரும்

ஓய்வின்றி முன்வந்தே காக்கும் பொறுப்பினை

ஆர்வமுடன்  ஏற்கின்றார் இங்கு.


பாதித்தால் எல்லாம் தலைகீழாய் மாறிவிடும்!

பதிப்பே இன்றி நகர்ந்தால் நலமாகும்!

ஊர்கூடி தேரிழுக்கும் இந்த முயற்சிக்குத் 

தோள்கொடுப்போம் எல்லோரும் சேர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home