Sunday, November 22, 2020

ஒற்றுமையே வலிமை

 ஒற்றுமையே வலிமை!


நான்கு மாடுகள் ஒன்றாக

புல்லை மேய்ந்து வாழ்ந்தனவாம்!


அதனைப் பார்த்த சிங்கராஜா

மாட்டைத் தாக்கப் பாய்ந்ததங்கே!


மாடுகள் நான்கும் சேர்ந்தேதான்

சிங்கத்தை விரட்டித் திரும்பினவாம்!


இதனைப் பார்த்த நரியாரோ

மாடு களைநான் பிரித்திடுவேன்


என்றே சிங்கத் திடம்சொல்ல

சிங்கமும் ஆகா என்றதுவே!


தனித்தனி யாகப் புல்மேய்ந்தால்

நிறைய கிடைக்கும் என்றேதான்


ஆசை மூட்டி மாடுகளைப் 

பிரிந்தே போக வைத்ததுவே!


குகையின் அருகே ஒருமாடு

தனியாய் வந்ததும் சிங்கந்தான்


பாய்ந்தே அடித்துக் கொன்றதங்கே!

நரிக்கும் பங்கைக் கொடுத்ததுபார்!


இதனைப் பார்த்த மாடுகளோ

நரியை அடித்து விரட்டியது!


மூன்று மாடுகள் ஒற்றுமையின்

வலிமை தன்னை உணர்ந்ததுபார்!


ஒற்றுமை தானே வலிமைதான்!

ஒன்றாய் வாழ்தல் விவேகந்தான்!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home