Saturday, November 21, 2020

இஞ்சியப்பன் கதை

 வஞ்சகரை நம்பாதே!

இஞ்சியப்பன் பொம்மைக் கதை!

GINGER BREAD BOY  STORY

இஞ்சிரொட்டிப் பையனை இஞ்சியப்பன் என்றழைப்போம்!

இஞ்சியப்பன் தன்னை வாங்கிவந்து உண்பதற்குத்

தொட்டபோது துள்ளித்தான் ஓட

 துரத்தினர்!

சிட்டாய்ப் பறந்தான் விரைந்து.


மாடுகள் கொட்டிலுக்குள் சென்றான் முறைத்தன!

ஓடினான் அங்கே குதிரைகள் லாயத்துள்ளே!

ஓங்கிக் கனைத்தன அஞ்சியே ஓடினான்!

ஆற்றங் கரையில் நரிகண்டான்  நின்றுவிட்டான்

ஆற்றைக் கடப்பதற்கே பார்த்து.


நரியும் முதுகிலே ஏறச் சொல்ல

நரியுடைய வால்பகுதிக்கு இஞ்சியப்பன் சென்றான்!

நரியோ நடுப்பகுதிக்கு வந்ததும் தண்ணீர்

உயர்ந்திட, இஞ்சியப்பா! என்முதுகுக்கு வாஎன்(று)

அழைக்க முதுகுமேல் வந்தமர்ந்தான் அங்கு!

சிலதூரம் சென்றது காண்.


இஞ்சியப்பா! என்மூக்கின் மேலே அமர்ந்துவிடு

நன்றாக பாதுகாப்பாய்க் கொண்டுசெல்வேன் வந்துவிடு

என்றதும் இஞ்சியப்பன் நம்பியே வந்துவிட்டான்!

வஞ்சகம்  கொண்ட  நரியங்கே தந்திரமாய்த்

தின்றது இஞ்சியப்ப னைத்தான் ஆசையுடன்!

வஞ்சகரை நம்புதல் தீது.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home