Monday, November 23, 2020

குறவர்கள்

 நரிக்குறவர்கள்


குறிஞ்சி மலைப்பகுதி வாழ்ந்தோர் குறவர்!

குறிஞ்சியை விட்டேதான் வாழ்நிலைக் கேற்ப

அரசின் குடியிருப்பில் வாழ்கின்றார் சேர்ந்து!

நரிபிடித்து வாழ்ந்தவர்கள் பாசிமணி ஊசி

தெருத்தெருவாய் விற்றவர்கள் முன்னேற எண்ணிப்

படிப்புக் களத்தில் பணிக்களத்தில் என்று

நெறிமுறை வாழ்வை விரும்புகின்றார் இன்று!

குறவர் மொழியான வக்போலி தன்னில்

குறள்கள் மொழிபெயர்க்கப்  பட்ட பெருமை,

சிறப்பு இவர்களுக்(கு) உண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home