Sunday, February 21, 2021

முத்தொள்ளாயிரம் 11

 முத்தொள்ளாயிரம்

பாடல் 11

காராட் டுதிரம்தூய் அன்னை களன்இழைத்து

நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! – போராட்டு

வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்

நெஞ்சங் களங்கொண்ட நோய். – 11


சினவேல் மன்னவன் கோதையை நாடி

மனக்காதல் சென்றது! நோய்நீங்க அம்மா

புனலாட்டி ஆடுவெட்டிப் பார்த்தாலும் எந்தன்

மனநோய்தான் நீங்குமோ? என்னுடைய காதல்

மனமோ அரசனிடந்தான்! சொல்.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home