Friday, February 19, 2021

முத்தொள்ளாயிரம் 10

 

முத்தொள்ளாயிரம்

பாடல் 10

இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்கச்
சொல்லும் பழியோ பெரிது. – 10
---------------------------------------------------------------
கவிதை

என்னழகைத் தன்வச மாக்கிய கள்வன்தான்!
என்நெஞ்சைத் தன்வச மாக்கிய கள்வன்தான்!
மன்னனாம் கோக்கோதை போகு மிடமெல்லாம்
வன்பழி தூற்றுகின்றார்! நானடக்கி வைத்திருந்தேன்!
என்மனதை  ஊரறியச் செய்துவிட்ட கள்வனிவன்!
என்செய்வேன்? என்னசொல்வேன்? நான்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home