Wednesday, February 17, 2021

முத்தொள்ளாயிரம் 9

 

முத்தொள்ளாயிரம்

பாடல் 9

வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
அருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9

குடநாடன் வஞ்சிக்கோ மானே வருக!
மகத்தாய் வரவேற்றே மங்கைக் கருகில்
புறத்தே இருப்பவ ரெல்லாம்  மகிழ்ந்து
கலகலப்பாய் உள்ளனர்! ஆனால் இவளோ
அரசரைக் கண்டபின்பும் ஏனோ வாடி
கலகலப் பின்றி இருக்கின்றாள்! பாராய்!
அழகிழந்தே ஏங்குகிறாள் ஏன்?


பி கு:
கலாம் -- கலகலப்பு

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home