Tuesday, February 16, 2021

முத்தொள்ளாயிரம் 7

 முத்தொள்ளாயிரம் 

பாடல் 7

கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக

நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல்

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்றவென் நெஞ்சு. – 7

-----------------------------------------------------------------

கவிதை


பனிப்பொழியும் மாதமிது! போர்வையாய்க் கைகள்

துணையான போதும்  நடுங்குகிறேன்!

கோதை

கனல்சினம் கொண்டவன்! பூணாரம்

மாலை

அணிந்தவன் அந்த அரசன் உனக்குத்

துணையாக வந்தே நடுக்கம் தணிப்பான்

எனச்சொல்லி என்நெஞ்சம் சென்றது!

ஆனால்

எனைப்போல கைகளைப் போர்வையாய் மாற்றி

அணைத்தேதான் கோட்டையின் வாசலில் நின்று

தவிக்கிறது போலும் அங்கு.





 

 


0 Comments:

Post a Comment

<< Home