Sunday, February 14, 2021

முத்தொள்ளாயிரம் 5

 முத்தொள்ளாயிரம் பாடலுக்குக் கவிதை!

பாடல் 5

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்

நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்

தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்

செங்கோலன் அல்லன் என. – 5

--------------------------------------------------------------------

கவிதை


சேரமன்னா! உன்னை வணங்க மறுப்போரை

வீரமுடன் போரிட்டே மண்கவர்ந்து கொள்ளலாம்!

பார்வை வலைவீழ்ந்த பெண்ணழகைக் கொள்ளலாமா!

தாய்மாரோ செங்கோலன் இல்லையென்பார் உன்னைத்தான்!

வேந்தன் மலைபோல் அகன்றிருக்கும் மார்புடையோன்!

கூட்டமாக நின்றுகொண்டு வேல்களால் மாந்தைநகர்

நாட்டுமக்கள் தாக்குவார்கள்! மாதர்

வரிசையாய்ப்

போட்டிருக்கும் கைவளையல் தன்னைக் கவரலாமா?

நாட்டுமன்னா நல்லபதில் கூறு!








 .

0 Comments:

Post a Comment

<< Home