Thursday, February 11, 2021

முத்தொள்ளாயிரம் 3

 

முத்தொள்ளாயிரக் காட்சி!

பாடல் 3

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - 3
-----------------------------------------------------------------
கவிதை:

தலைவியின் ஏக்கம்!

போர்க்குதிரை பூட்டிய தேரில் மெதுவாக
ஊர்ந்தேதான் வேந்தன் உலாவரும் காட்சியோ
ஈர்க்க மகளிர் ரசிக்கின்றார் கண்களால்!
மேனியோ மாமை நிறமிழந்தே பொன்னிறம்
ஊறிய வண்ணம் பசந்தது! குற்றமில்லை!
மாமையைக் காட்டிலும் இப்பசலை மேலாகும்!
ஏக்கத்தின் சின்னம் இது.

மதுரை பாபாராஜ்


.

0 Comments:

Post a Comment

<< Home