Tuesday, February 09, 2021

முனைவர் சங்கர சரவணன்

 


வலைத்தமிழ் வழங்கும் 

எனைத்தானும் நல்லவை கேட்க

குறளோடு் நடைபோடு

முனைவர்.சங்கர சரவணன்

கட்டைவிரல் கேட்காத குருநாதர்!

குருநாதர் தட்சணை கேட்பார்! மரபு!

துரோணர் ஏகலைவன் கட்டை விரலைக்

குருவிற்குத் தட்சணை கேட்டார்! கொடுமை!

குருஇடத்தில் வள்ளுவரை வைத்தே இங்கே

திருக்குறளைக் கற்கின்றார் ஏகலைவன் மக்கள்!

குருவென்றும் தட்சணை கேட்டதே இல்லை!

குருவணக்கப் பண்பே இது.

முனைவர் சங்கர சரவணனுக்கு வாழ்த்து!

வள்ளுவத்தின் பன்முகத் தன்மைக்குச்

சங்கரர்

அள்ளித் தெளித்த கருத்துகள் அற்புதம்!

உள்ளங் கவரும் விளக்கத்தை ஆற்றலுடன்

வல்லவர் தந்ததை வாழ்த்து

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

இந்தக் குறளுக்கு ஆசிரியர் மாணவர்கள்

என்ற விகித விளக்கம் அருமைதான்!

தொண்டுகள் எல்லாம் குறளை மையமாக்கி

தந்தநல் ஆளுமைக்கு வாழ்த்து.

காந்தி வேடம்!

காந்திவேடம் போட்டவர் கண்டபடி வாழ்ந்தவர்!

காந்திவேடம் தந்த புகழாலே நல்லவராய்

மாறினார் வாழ்க்கையில் காந்தியின் தாக்கத்தால்!

மாறுவோம் வள்ளுவ மேற்று.


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை

(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:872)

வில்லேர் உழவர்கள் காவல் துறையினர்

சொல்லேர் உழவர்கள் ஊடக நண்பர்கள்

இவ்விருவர் ஆற்றும் கடமைக்கே ஒப்பீடு

செய்தார்! புதுமையை வாழ்த்து.

ரேசன் அட்டை வண்ணங்கள்

நாட்டிலே மக்கள் பொருளாதா ரத்தரத்தில்

ஏற்படும் வாழ்க்கையின் தேவைகளைக் கொண்டுதான்

நாட்டில் அரசளிக்கும் அட்டைகளின் வண்ணங்கள்!

தேவைகள் ஆதாரம் செப்பு.

குறள்நெறிக் குரிசில்- முனைவர் சங்கர சரவணன்-- வலைத்தமிழ் இளங்கோ.

மூவேந்தர் காட்சி உலாபோல் காணொளியில்

நாவேந்தி வந்த கருத்துக்  கலந்துரை

யாடலில் வள்ளுவத் தேரின் வடம்பிடித்தே

தேரை இழுத்தமைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

அருமையாய் இருக்கு!

பெருமையாய் இருக்கு!

👏👏👏👏👏👏👏

இமயவரம்பன்




0 Comments:

Post a Comment

<< Home