Thursday, February 11, 2021

முத்தொள்ளாயிரம் 2

 

முத்தொள்ளாயிரக் காட்சி!

பாடல் 2

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்

தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்

வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்

கண்டுலாஅம் வீதிக் கதவு – 2

----------------------------------------------------------------

கவிதை:


வண்டுமொய்க்கும் பூமாலை ஏந்தி குதிரைத்தேர்

முந்திவர சேரன் உலாவந்தான்! பேரழகைக்

கண்டு ரசிக்க மகளிர் கதவுகளை

முண்டித் திறக்கவும் பார்த்தால்  மயங்கிடுவாள்

என்றேதான் தாய்மார்கள் அக்கதவை மூடிவிட

இப்படி மூட, திறக்க கதவுகளின்

கொண்டியோ தேய்ந்தது தான்மிச்சம்!

எண்ணமோ

அங்கே கனியவில்லை யாம்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home