Friday, February 12, 2021

முத்தொள்ளாயிரம் 4

 முத்தொள்ளாயிரக் காட்சி

முத்தொள்ளாயிரம் 4

கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்

அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்

ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்

வாயும் அடைக்குமோ தான் 

--------------------------------------------------------------

கடல்போன்ற மாப்படை சூழவே சேரன்

நகர்வலம் பார்த்து வருகிறான்! தோழி!

புறக்கண்ணால் பார்த்து ரசிக்க கதவை

அடைத்தேதான் தாழிட்டாள் தாய்தான்!

ஆனால்

நகரமக்கள் என்னை அவரோடு சேர்த்தே

பகர்வதை  ஊர்வாயை மூடி அவளால்

அடைக்க முடியுமா? சொல்.


மதுரை பாபாராஜ்





 

0 Comments:

Post a Comment

<< Home