Tuesday, February 16, 2021

முத்தொள்ளாயிரம் 6

  முத்தொள்ளாயிரம்

பாடல் 6

புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? – 6
--------------------------------------------------------------
கவிதை

மாந்தை நகரிங்கே புன்னாகம் நன்னாகம்
ஓங்கிநிற்கும்  தென்னை மரமிருக்கும்
நன்னகரின்
சேரன் கனவிலே என்மார்பைத் தொட்டுவிட்டான்!
ஊராரில் யாரறிவார்? கண்டபடி பேசுகின்றார்!
மாதின் மனமறிவார் யார்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home