Wednesday, February 17, 2021

முனைவர் சங்கர சரவணன்

 குறளோடு நடைபோடு


முயற்சியே திருவினையாக்கும்

கலந்துரையாடல்

ஏற்பாடு

வலைத்தமிழ் இளங்கோ

குறள்நெறிக் குரிசில் சி.இராஜேந்திரன்

சிறப்பு விருந்தினர் :

முனைவர் சங்கர சரவணன்


குறளோடு நாளும் நடைபோடு என்ற

சிறப்புத் தலைப்பில் முனைவர் அவர்கள்

முயற்சி திருவினை யாக்கும் உரையைத்

தளமாக்கித் தந்ததை வாழ்த்து.


குறள் 292


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.


அலுவலர்கள் தாங்கள் அறிந்த செய்தி

இரகசிய மானதெனில் காப்பதற் கேற்ப

மறைத்தேதான் சொல்வது பொய்யில்லை  என்றே

குறளை விளக்கினார் நன்று.


பலர்சிலர் சொல்லைக் குறளிலே அய்யன்

பலவாறாய்ப்  பாக்களில் எப்படி யெல்லாம்

பயன்படுத்தி உள்ளார் எனஉரைத்தார் தம்பி!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இளங்கோவும் ராசேந் திரனும் முனைவர்

சரவணனை நோக்கி விளக்கத்தைக் கேட்க

தயங்காமல் புன்னகை வீசி பதில்கள்

சரஞ்சரமாய்த் தந்ததை  வாழ்த்து.


திரு.இரா.இரேணுகன்

திரு.ந.பாலு

திரு.மு.பொன்னியின் செல்வன்

திரு.இரா.இராமசாமி

திரு.கோ.இமயவரம்பன்

--------------------------------------------------------------

மூலப் பொருளின் கருத்துச் சிதையாமல்

யாவரும் கேட்கின்ற வாறு கணினியில்

ஆர்வமுடன் ஐவரணி பாடுபட்டுக் கோர்ப்பதை

வாழ்த்துகிறோம் நன்றி நவின்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home