Tuesday, February 23, 2021

முத்தொள்ளாயிரம் 12

 முத்தொள்ளாயிரம்

பாடல் 12

மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்

சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல

திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால்

உலகங் கிடந்த இயல்பு. 12

-------------------------------------------------------------------

கவிதை

தட்டிவிட்டால் பாயும் குதிரைகொண்ட சேரனிடம்

சுற்றிவரும் என்னுள்ளக் காதல்நோய்

வாட்டுவதை

நெற்றித் திலகமிட்ட மங்கையே! நீர்வளம்

அட்டியின்றி ஏந்துகின்ற மாந்தை நகரத்தார்

எப்படியும் சொல்லவேண்டும் செப்பு.






0 Comments:

Post a Comment

<< Home