Sunday, March 28, 2021

தாய்லாந்து மொழியில் திரு் கோ.சுந்தரர் அவர்களுக்கு வாழ்த்து




 நன்றி அஷ்ரப்்

திரு.கோ. சுந்தரகுமாருக்கு வாழ்த்து.

'தாய்'மொழியாக்கம்

இந்திய நாட்டின் தமிழ்நாட்டில் தோன்றிய

வண்டமிழ் வள்ளுவத்தை தாய்லாந்து தாய்மொழியில்

சுந்தரர் இங்கே மொழிபெயர்த்தார்! நூல்படியை

இந்திய நாட்டுப் பிரதமர் மாண்புமிகு

பண்பாளர் மோடியிடம் தந்த மகிழ்வான

அந்தத் தருணத்தை வாழ்த்து.


தாய்மொழி தாண்டியே தாய்லாந்து மக்களின்

'தாய்'மொழியில் வள்ளுவத்தை

ஆய்ந்து மொழிபெயர்த்தார்!

வாழ்க வளமுடனே வண்டமி்ழ்போல் வாழ்கவே!

வாழ்த்தி மகிழ்கின்றேன் இங்கு.

-------------------------------------------------------------------------

கோ.சுந்தர குமார்

வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. 

மொழிபெயர்ப்புக்காக அமைக்கப்பட்ட குழுவில் நான் ஒரு அங்கத்தினராக மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் பணி. அதாவது, குறள் ஒன்றரை அடியில் சரியாக உள்ளதா, பொருள் எவ்வாறு உள்ளது என்று.

தாய் படிக்க பேச தெரிந்த மூன்று நபர்கள், நான் உள்பட, இந்த சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டோம்.

மொழிபெயர்ப்பு பணியை தாய்லாந்து நாட்டின் விஞ்ஞானி ஒருவரால் செய்யப்பட்டது.

முனைவர் சுவித். இவர் பாரத் ரத்னா கலாம் ஐயா அவர்களின் சில புத்தகங்களை தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.



0 Comments:

Post a Comment

<< Home