Wednesday, July 14, 2021

பெருந்தலைவர் காமராசரை வணங்குவோம்!

 பெருந்தலைவர் காமராசரை வணங்குவோம்!



கடமை நாயகர் பிறந்தநாள்:15.07.21


சிறந்த மனிதர் சிவகாமி மைந்தர்!

பிறவிக்கு நாளும் சிறப்பளித்த ஏந்தல்!

கடமையில் நேர்மை எளிமையான வாழ்க்கை

தடம்பதித்த காமராசர் நற்புகழ் வாழ்க!

மகத்தான நம்மவரைப் போற்று!


விருதுபட்டி என்றிருந்த ஊரின் பெயரை

விருதுநகர் என்றுமாற்றி ஊருக்கே மெச்சும்

விருதளித்தார் காமராசர்! நாட்டிற்கு நல்ல

பெருமை அளித்தார் உணர்.


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் 

கோடாமை சான்றோர்க்கணியென்றார் அய்யன்!

இமைப்பொழுதும் சோராமல் தொண்டாற்றி வாழ்ந்த

அமைதிப் புரட்சியின் வித்து.


நேர்மை நியாயம் எளிமை நடுநிலைமை

வாழ்வியலாய்ப் பின்பற்றி வாழ்ந்தவர் காமராசர்!

ஏழை எளியவரின் வாழ்வுயரப் பாடுபட்ட

ஏந்தலைப்  போற்றிப் புகழ்.


பொதுவாழ்வில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற

பொதுநலத் தொண்டின் இலக்கணம்

தந்த

நடுநிலைப் பண்பாளர்  காமராசர் என்பேன்!

பொதுமக்கள் தொண்டரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home