Tuesday, July 27, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம். பறவையே கேள்!

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.

பறவையே கேள்!

தோன்றின் புகழுடன் தோன்றுக!

செய்தி: கொரோனா கால உண்மை நிகழ்வு:

மூச்சுத்திணறலுடன் முதியவரும் இளைஞரும் மருத்துவ மனைக்கு வந்தனர். உயிர்க்காற்று தருவதில் சிக்கல். முதியவர்," நான் வாழ்ந்து முடித்தவன். அவர் வாழ வேண்னடியவர். அவருக்குக் கொடுத்துக் காப்பாற்றுங்கள்," என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்று மரணத்தை ஏற்றார்.

-----------------------------------------------------------------

வாழப் பிறந்தவர்கள்! வாழத் துடிப்பவர்கள்!

வாழ்ந்து முடித்தவர்கள் என்ற வரையறைக்குள்

வாழ்க்கை அடங்கிடும்! வாழப் பிறந்தவர்கள் 

வாழ்வின் முதல்நிலை!

வாழத் துடிப்பவர்கள் வாழ்வின் இடைநிலை!

வாழ்ந்து முடித்தவர்கள் வாழ்வின் கடைநிலை!

வாழ்வின் கடைநிலை மாந்தர் முதலிரண்டு

சாரார்கள் வாழவழி காட்டல்  கடமையாம்!


மதுரை பாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home