Wednesday, August 25, 2021

காவல்துறை தொண்டில் 20/21 ஆண்டுகள்! 26.08.21


தங்கை பாக்கியமணி ஜெகநாதன் இணையரின்  மகன் காவல்துறை ஆய்வாளர்     

J.திரு வெங்கடகிரி ராஜாவுக்கும் 

அனைவருக்கும் வாழ்த்து!


காவல்துறை தொண்டில் 20/21 ஆண்டுகள்!


26.08.21


காவல் துறையின் தொலைத்தொடர்பு சேவையில்

ஆவலுடன் இங்கே இருபதாண்டு தொண்டுகளை

ஆர்வமுடன் இன்று நிறைவுசெய்தே வெற்றிநடை

போடும் இருபத்து ஒன்றினைக் காணுகின்ற

ராஜாவை வாழ்த்துகிறேன் நான்.


ஆர்வம்  முயற்சியுடன் ஆற்றலும் சேர்ந்துவிட்டால்

பாரில் உழைப்பின் மதிப்பால் உயரலாம்!

நேர்மையுடன் பல்வளங்கள் சூழ குடும்பத்தார்

வாழ்த்திசைக்க வாழ்கபல் லாண்டு.


இருபத்தோ ராவது ஆண்டில் நுழையும்

குழுவினர்  எல்லோரும் பல்லாண்டு தொண்டு

புரிந்தேதான் பன்முக ஆற்றலுடன் வாழ்க!

வளங்களுடன் வாழ்கபல் லாண்டு.


மாமா மதுரை பாபாராஜ்

அத்தை வசந்தா




0 Comments:

Post a Comment

<< Home