Tuesday, August 24, 2021

மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்கு கவிதை:


மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்கு கவிதை:


அம்மா வருவாரா? என்பசி நீங்குமா?

என்றே எதிர்பார்த்து வாய்திறந்து காத்திருக்கும்

அன்புக் குழந்தைப் பறவை தூதனுப்பி

இன்று வணக்கத்தைக் கூறுகின்ற ராஜாவை

நன்றியுடன் வாழ்த்துகிறேன்  நான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home