Monday, August 23, 2021

திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வரிசையில் செல்வதே ஒழுங்கு!


அஞ்சு மஞ்சள் வாத்து

அஞ்சி நடக்கும் பாத்து

பஞ்சு போன்ற பாதத்தால்

மெதுவாய் நடக்கும் வாத்து!

வரிசை யாகப் போகுது

முண்டி நெருக்கிப் போகாது

மனிதன் மட்டும் ஏனோ

வரிசை கலைத்துப் போகிறான்?


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home