Saturday, October 23, 2021

நன்றி மறவா சிங்கம்!


நன்றி மறவா சிங்கம்!


ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் ஒரு சிங்கத்தை வளர்த்து வந்தாள் இதையறிந்த அரசாங்கம் சிங்கத்தை பிடித்து மிருக காட்சி சாலை கூட்டில் அடைத்தது ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த பெண் சிங்கத்தை காண சென்ற போது மெய் சிலிர்க்கின்ற காட்சி


சிங்கப்பெண்!


வீட்டிலே சிங்கம் வளர்த்துவந்தாள் பெண்ணொருத்தி!

நாட்டரசோ சிங்கத்தைக் கூண்டில் அடைத்தது!

வாட்டமுடன் ஏழாண்டு சென்றபின் சிங்கத்தை

நாட்டமுடன் பார்க்கத்தான் சென்றாள் மகிழ்ந்தேதான்!

பார்த்ததும் நாடிவந்தே கட்டிப் பிடித்தேதான்

ஆர்வமுடன் அன்பையும் நன்றியையும் சிங்கமோ

காட்டியதும் மெய்மறந்தாள் பெண்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home