Tuesday, December 14, 2021

கூடுகட்ட இடந்தேடி!


கூடுகட்ட இடந்தேடி!


கூடுகட்ட வான்பறவை பாங்காய் இடந்தன்னைத்

தேடி அலைந்தபோது பார்த்ததே ஓரிடத்தை!

நாடியே கூடுகட்டப் பார்த்தபோது அவ்விடமோ

தாவிப் பறந்ததே! என்னவென்று பார்த்தபோது

வாலிபன் வைத்த சிகையழகே என்றுணர்ந்து

வன்பறவை கண்டு பறந்ததே வேறிடத்தை

நாடித்தான்! நாகரிகம் பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home