Sunday, December 12, 2021

தலைநகர் டில்லியில் விவசாயிகளும் ஏழைக் குழந்தைகளும்!


தலைநகர் டில்லியில் விவசாயிகளும் ஏழைக் குழந்தைகளும்!


உலகுக்கே நாளும் உணவளிக்கும் மக்கள்

தலைநகர் டில்லியில் போராடி வாழ்ந்தார்!

இதையெல்லாம் நாள்தோறும் வேடிக்கை பார்த்த

குழந்தைகள் தங்கள் பசிதீர உண்டார்

விவசாய மாந்தருடன் உட்கார்ந்து! இன்று

விவசாயி போராட்டம் தன்னை நிறுத்தி

அவரவர் ஊருக்குச் செல்கின்றார்! நாளும்

வயிறார உண்டிருந்த ஏழைக் குழந்தை

வயிற்றுப் பசியை எவர்போக்கு வார்கள்?

மகிழ்ச்சி்யான சூழல் ஒருபுறம்! அங்கே!

துடிக்கவைக்கும் ஏழ்மை மறுபுறம் அங்கே!

புரியாமல் பார்க்கும் குழந்தைகள் ஏக்கம்!

பழகிவிட்ட வாழ்க்கைத் துயர்.


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home