Tuesday, December 21, 2021

OPEN TIME!

 இல்லறத்தின் வேர்!


OPEN TIME!


குறித்தநேரம் காலை வரவேண்டும்

என்ற

நெறிகள் கணினி அலுவலக வேலை

முறையில் கிடையாது! ஊழியர்கள் எல்லாம்

குறிப்பிட்ட வேலை இலக்கை முடித்து

நிறைவுசெய்தால் போதுமாம் இங்கு.


காலைப் பொழுதில் நினைத்தநேரம் வந்தேதான்

வேலை இலக்கை முடிக்கின்றார்! செல்கின்றார்!

காலமாற்றம்  எல்லாம் தொழில்நுணுக்க

மேம்பாட்டின்

கோலமாற்றம் என்றேதான் சொல்.


வீட்டுப் பணிகளை மங்கை முடித்துவிட்டு

லூட்டிக் குழந்தைகளை எல்லாம் சமாளித்து

நாட்டுப் பணிக்களம் நோக்கிப் பறக்கின்றார்!

ஆற்றலைப் போற்றித்தான் வாழ்த்து.


ஆண்களும் பெண்களும் ஓடிஓடி வாழ்கின்றார்!

பேரிடர் காலத்தில் வீட்டில் இருந்துகொண்டும்

ஆர்வமுடன் வேலைகள் செய்கின்றார்

நாள்தோறும்!

பாருக்குள் பம்பரம்போல் சுற்றுகின்றார்

எப்பொழுதும்!

வேர்களானார் இல்லறம் காத்து.


மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home