Monday, December 20, 2021

குறள் 311


32.இன்னா செய்யாமை

குறள் 311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்


சிறப்பில் மிளிரவைக்கும் செல்வத்தை நாளும்

பெறக்கூடும் என்றாலும் வாழ்வில்-- பிறருக்குத்

துன்பத்தைச் செய்யாமல் வாழ்வதே தூய

மனமுடையோர் கொள்கையாம் கூறு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home