Monday, December 20, 2021

இசைமலை சந்தோஷ் நாராயணன் வாழ்க!


நினைத்தேன் எழுதினேன்

இசைமலை சந்தோஷ் நாராயணன் வாழ்க!

இசையோடு நாளும் விளையாடிப் பார்க்கின்றாய்-- கேட்போர்

இதயத்தை இசையோடு கட்டித்தான்

போடுகின்றாய்


என்னென்ன மாயங்கள் எப்படித்தான்

காட்டுகின்றாய்-- ஆகா

பண்களெல்லாம் போட்டிபோட்டு வரவைத்து மகிழ்கின்றாய்


துள்ளலுக்குத் தூதுவிட்டுத் துடிக்கத்தான் வைக்கின்றாய்-- அடடா

அள்ளித்தான் ஆர்ப்பரிக்க அருமையாகப் பொழிகின்றாய்!


துன்பியல் பின்னணியா கேட்போரை அழவைப்பாய்---

நெஞ்சைப் பிழியவைத்து சோகத்தில் மிதக்கவைப்பாய்


ஏற்றத்தில்  இறக்கத்தில் இசையலைகள் உணரவைப்பாய்-- ஆடவைக்கும்

பாட்டுகளில் மெய்மறந்து ரசிக்கத்தான் செய்திடுவாய்!


இசையிலே மாயவலைப் பின்னுகின்றாய் நீவாழ்க-- தாள

நடைபோட்டு வாழ்வாங்கு

வாழியவே என்றென்றும்!


சந்தோசே ! சந்தோசே! சந்தோச மாய்வாழ்க-- இன்பம்

தங்கித்தான் தழைத்திருக்க ஆற்றலுடன் நீவாழ்க!


மதுரை பாபாராஜ்






 

0 Comments:

Post a Comment

<< Home