Saturday, December 18, 2021

புலமையும் எளிமையும்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை! 

 பறவையே!

இன்றைய கவிதையைக் கேள்!


புலமையும் எளிமையும்!


பாவினத்தின் சொற்கள் புலமையைக் காட்டினால்

பாமரர் தத்தளிப்பார் செய்யுளாய் மாறிவிடும்!

பாவினத்தின் சொற்கள் எளிமையைக் காட்டினால் 

பாமரர்க்கும் இங்கே புரியும் கவிதையென்றே

பாவினத்தைக்  கேட்பார் ரசித்து.


புலவர்கள் செய்யுளை இங்கே எளிமை

இழையோடத் தந்து ரசிப்பதற்குத் தூண்டும்

நிலையே கவிதை படைத்தலின் நோக்கம்!

கருத்தை விதைத்தல் கவிதையின் பின்னல்!

கருத்தும் எளிமையும் கண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home