Monday, October 24, 2022

வாழ்க்கை

 வாழ்க்கை!


காசில்லை என்றேதான் மக்களிங்கே ஓடுகின்றார்!

காசுவந்த பின்னால் பொருள்வாங்கி சேர்ப்பதற்கோ

ஈசல்கள் கூட்டம்போல் ஓடிப் பறக்கின்றார்!

காசைக் கொடுத்துப் பொருள்வாங்கி அப்பொருளைப்

பார்த்தேதான் வைப்பதற் கேற்றார்போல் வீடுபார்க்க

ஓடுகின்றார்! வாடகை கேட்டு மலைக்கின்றார்!

பாரிலே வாழ்கின்றோம் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home