Thursday, December 08, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

ஆற்றிலே கொக்கு பொறுமையுடன் காத்திருக்கும்!

ஆற்றுநீரில் சின்னஞ் சிறுமீன்கள் போகவிட்டு

பாயும் பெரியமீன் வந்தேதான் சிக்குமட்டும்

பார்த்து கவனமுடன் நின்றிருக்கும்! அப்படி

நாமும் பொறுமையுடன் காத்திருந்து மாபெரும்

சாதனையை நாட்டவேண்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்

குறள் 490:


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

மு.வ உரை:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

 

0 Comments:

Post a Comment

<< Home