Thursday, December 08, 2022

ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு எங்கள் கருத்து!

 நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்:



homesec@tn.gov.in


ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு எங்கள் கருத்து!

குறள் 932:

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

என்று வள்ளுவர் அறவுரை கூறுகிறார்.

உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்!


பொதுவாகவே கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிடுகின்றனர் சூதாட்டம் நடத்துவோர். இந்த கவர்ச்சிகரமான ஆசையைத் தூண்டுகின்ற விளம்பரங்கள் என்னும் விளக்குகளில் விட்டில் பூச்சிகளாக விழுகின்றனர் சலனமனங் கொண்டவர்கள். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. ஏமாற்றத்திற்கு உள்ளாகும் போது விரக்தி மனப்பான்மை தலை தூக்குகிறது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். இது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்கவைத்துப் புண்படுத்தச் செய்கிறது.


எனவே ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யவேண்டும்!


இவண்

மதுரை பாபாராஜ்

வசந்தா

9003260981

0 Comments:

Post a Comment

<< Home