Thursday, May 18, 2023

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் கவிதை!

பத்திலே பார்வை! இருபதிலே ஏற்றந்தான்!

முப்பதில் தோன்றும் முறுக்குதான்! அங்கங்கே

நாற்பதில் எல்லாம் நழுவலே! ஐம்பதில் 

தோன்றும் அசதி! அறுபதிலோ ஆட்டந்தான்!

ஏக்கம் எழுபதிலே! எண்பதில் தூக்கந்தான்!

வாழ்க்கை முடிந்துவிடும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home