Sunday, May 14, 2023

சஞ்சய் கார்த்திகேயன்



 உபநயனம்!


பூணூல் அணியும் விழா!


நாள்: 10/11.05.23

செல்லப் பேரன் சஞ்சய் கார்த்திகேயன்


பெற்றோர்:

S. கார்த்திகேயன்--K.தேவிகாராணி


தாத்தா பாட்டிமார்:


திரு.V.சந்தானம்

திருமதி S.சாந்தி 


திரு.S.P.கஜராஜ்

திருமதி G.மல்லிகா

வரவேற்பு!

அகங்குளிரப் பார்த்து முகம்மலர பன்னீர்

தெளித்தே வரவேற்றார் நின்று.


விழா!


குளம்பி குளிர்பானம் தேடிவந்தே தந்தார்!

தரமான பல்வகை சிற்றுண்டி ஏற்றோம்!

சிரித்த முகத்துடன் அன்பாய் அளித்தார்!

வயிராற உண்டோம் விருந்து.


மேடையில் நாயகன் சஞ்சய் அமர்ந்திருக்க

தாத்தாக்கள் பாட்டிமார் சுற்றத்தார் சூழ்ந்திருக்க

ஆட்சி புரிந்ததே மங்கள இன்பந்தான்!

காட்சியைக் கண்டோம் ரசித்து.


பூணூல் அணியும் விழாவின் நிகழ்வுகளில்

கானமழை மந்திரமாய் அங்கே பொழிந்திருக்க

நாதசுரம் மற்றும் தவிலிசை மங்களமாய்

தேனிசையாய் உள்ளத்தில் எங்கள் செவிகளில்  

பாய்ந்துவர கேட்டோம் மகிழ்ந்து.


முதல்நாள் நிகழ்வும் மறுநாள் நிகழ்வும்

மகத்தாய் அமைந்தேதான் கூடத்தின் கூட்டம்

அகமலர்ந்தே பேசி மகிழ்ந்தே இருந்தார்!

திசைதோறும் பார்த்தோம் ரசித்து.


மதிய உணவு!

 

வாழை இலையில் இடமின்றி காய்கறிகள்

வாகாக வைத்தேதான் போதுமென்று சொல்லுமட்டும்

மாவிருந்து தந்தார் மனங்குளிர அன்புடனே!

ஆகா! அருமைதான் பார்.


அனைத்துவகை ஏற்பாடும் எந்தக் குறையும்

தினையளவும் இல்லாமல் செய்திருந்த நேர்த்தி

மனதைக் கவர்ந்தது! நன்றியுடன் வாழ்த்து!

அனைவரும் வாழ்கபல் லாண்டு.


வரவேற்பு முதலாய் வழியனுப்பு மட்டும்

விருந்தோம்பல் தென்றலாய் வீச திளைத்தோம்!

கருத்தாய்க் கவனித்தார் அன்பு மிளிர!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home