Friday, May 26, 2023

பிள்ளையா? தொல்லையா?


 

பிள்ளையா? தொல்லையா?


தவமென்ன செய்தார்? பாவமென்ன செய்தார்?


நேர்மறை முன்னேற்றப் பாதைப் பயணமென்றால்

வாழ்விலே  இத்தகைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க

மாதவம் செய்திருப்பார் பெற்றோர் எனப்புகழ்வார்

தாரணி மக்கள்தான் சாற்று.


எதிர்மறைப் பாதைப் பயணமென்றால் ஊரார்

மதிக்காமல் இத்தகைய பிள்ளைகளைப் பெற்றோர்

பெறுவதற்கு என்னபாவம் செய்தாரோ என்றே

துடிப்பார்கள் பெற்றோரைப் பார்த்து.


நல்லபிள்ளை என்றால்தான் பெற்றோர் தலைநிமிர்வார்!

கெட்டபிள்ளை என்றாலோ பெற்றோர் தலைகுனிவார்!

பெற்றோர் மகிழ்வதும் பெற்றோர் துவள்வதும்

பிள்ளைகளை் பண்பால் உணர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home