Wednesday, August 30, 2023

சிறுபாணாற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை!

----------------------+------------

பூழி பூத்த புழல் காளாம்பி

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்

வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்

அழி பசி வருத்தம் வீட………… (133-140)


கூரையில் வேய்ந்த மரச்சட்டம் காணவில்லை!

காரைச் சுவரைக் கறையான் அரித்ததால்

காளான் சுவரின் இடுக்கில் வளரந்திருக்க

சீரழகி என்மனைவி கையில் வளையலுடன்

கோரப் பசியால் வயிறு துடித்திருக்க

கீரையை அங்கே கைநகங் கொண்டேதான் 

ஆரணங்கு பார்த்துப் பறித்தேதான் வேகவைத்தாள்

பாவமாய் உப்பின்றி உண்ணும் பரிதாப

ஏழ்மை நிலையை மற்றவர்கள் பாராமல்

கூர்மதியாள் அங்கே கதவைத்தான் மூடினாள்!

பால்முகம் வாட உறவுடன் உண்டிருந்தாள்!

ஏழ்மைக் கொடுமையைப் பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home