Monday, August 28, 2023

கலங்கவைக்கும் சூழ்நிலைகள்


கலங்கவைக்கும் சூழ்நிலைகள்!


புலிவரக் கண்டேதான் மாற்றுவழி சென்றேன்!

மதம்பிடித்த யானையோ ஓடிவரக் கண்டேன்!

நிலைகுலைந்தே வேறுவழி சென்றேன்! கரடி

முரட்டுத் தனமாக வந்ததைக் கண்டேன்!

கலக்கமுடன் நானோ குழம்பித் தவித்தேன்!

சுழன்றுவரும் சூழ்நிலைகள் இப்படித்தான் வாழ்வில்

அலறவிடும் நாளும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home