Monday, September 25, 2023

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


ஏழையின்முன் உன்செல்வம் பற்றியே பேசாதே!

வாட்டுகின்ற துன்பத்தில் வாடுபவன்  முன்னேயோ

ஊற்றெடுக்கும் உந்தன் மகிழ்ச்சியைப் பேசாதே!

நாளும் வலிமையைப் பற்றி வலிமையற்ற

ஆளிடம் பேசாதே! பெற்றோரே இல்லார்முன்

தாய்தந்தை பற்றித்தான் பேசாதே!

புண்படும்!

காயப் படுத்தாதே தப்பு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home