Saturday, September 30, 2023

அலைக்குப் பின் அலைகள்



 அலைக்குப் பின் அலைகள்!


ஓரலை வந்தே முடிந்ததே என்றங்கே

பார்த்தபோது பேரலை ஒன்று திரண்டுவந்தே

பாயும் நிலையெடுத்தால் என்செய்வேன்? ஆழியே!

ஓய்வின்றி நாள்தோறு மா?


வாழ்வில் உளைச்சல்கள் ஒன்றன்பின் ஒன்றாக

ஆழி அலைபோல வந்தால் துடிக்கின்றோம்!

நாளும் துவள்கின்றோம் நாம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home