Thursday, November 30, 2023

மழை-- விடுமுறை அறிவிப்பு

 மழைக் காலத்தில் விடுமுறை அறிவிப்பு!

அநேகமாக எல்லா பள்ளி கல்லூரிகளுக்கு வாகனங்கள் உள்ளன. எனவே தூரம் ஒரு பொருட்டல்ல. சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். கனமழை நேரத்தில் இந்த மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும்.

ஒரே இடத்தில் பக்கத்து வீட்டு குழந்தைக்கு விடுமுறை.மற்றொரு குழந்தையின் பள்ளிக்கு விடுமுறை இல்லை. பள்ளி வாகன ஓட்டுநர்கள் எப்படி வருவார்கள்? 

நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரித்துவைத்து மழைக்காலத்தில் விடுமுறை அறிவிப்பு குழப்பமாக உள்ளது.

நிர்வாக வசதி வேறு; நடைமுறை வேறு!

என்பதை உணர்ந்து இனிமேல் அறிவிக்க வேண்டிக்கொள்கிறேன்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home