Tuesday, December 26, 2023

மனிதத்தேனீ


  பண்பாளர் மனிதத் தேனீ சொக்கலிங்கம்  அவர்களுக்கு நன்றி!


வண்ண விசிறியும் மஞ்சள்பை நாட்காட்டி

கண்கவரும் சாவிக்கொத் தும்தந்து

கைக்குட்டை

தந்தைக்கு நன்றி மறவாமல் ஆண்டுதோறும்

எண்ணமலர் நூலுடன் ஆறுபொருள் தந்தவரே

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

26.12.23

விஜயா பிரிண்டர்ஸ் 77 ஆண்டு சாதனைக்கு வாழ்த்து!


பண்பாளர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி!

மூன்று குறள்களின் கருத்துக்கு உகந்தவாறு

வாழ்கின்ற பண்பாளர் சொக்கலிங்கம் 

வண்டமிழ்போல்

வாழ்கபல் லாண்டு வளர்ந்து.

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

Parents duty is to provide  to their children  to occupy frontal position among wise.

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

A mother is more happy when others prsise her children than she thrilled when she begot them.

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

Duty of the child to his/ her parents is making the world to say that what penance their parents did to have such a wonderful children.

அச்சகத் தொண்டில் எழுபத்து ஏழாண்டு

உற்சாகம் நம்பிக்கை நாணயத்தால் தொய்வின்றி

அற்புதமாக ஈடுபட்டு சாதனை முத்திரை

நற்றமிழ் மாமதுரை போற்றவே பாடுபடும்

அச்சகத்தார் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home