Wednesday, December 20, 2023

உயிரில் கலந்த மதுரை

 உயிரில் கலந்த மதுரை


நற்றமிழ் வளர்த்த மதுரையிலே

நாற்பத் தெட்டாம் ஆண்டினிலே

பெற்றோர் தேவகி, முத்துசுப்பு

பெருமிதம் அடைய நான்பிறந்தேன்!


கற்றதும் அருமை மதுரையிலே

கவிஞன் ஆனதும் மதுரையிலே

சுற்றம் சிறந்ததும்  மதுரையிலே

சுற்றித் திரிந்ததும்  மதுரையிலே


பணிக்களம் பென்னர் மதுரையிலே

பக்குவம் பெற்றதும் மதுரையிலே

செதுக்கிய சிற்பி மதுரைதான்

பண்புகள் தந்ததும் மதுரைதான்


இல்லறம் தந்தது மதுரைதான்

இலக்கியம் தந்தது மதுரைதான்

நல்லவர் அறிஞர் தொடர்புகளால்

நாளும் கவித்திறன் வளர்ந்ததுவே


மதுரை எனது உயிர்மூச்சு

மறப்பது என்பது வெறும்பேச்சு

மதுரையை என்றும் வணங்கிடுவேன்

மனதில் நினைத்தே மகிழ்ந்திடுவேன்


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home