Monday, January 01, 2024

தூங்க முடியவில்லையே

 தூங்கமுடியவில்லையே!


காட்டுத்தீ! வெள்ளம்! எரிமலை! பூகம்பம்!

வாழ்வின் நடைமுறை காணும் நிகழ்வாய்

மாறிவிட்டால் நிம்மதி கானலாய் மாறும்!

வேடிக்கை பார்க்கவைக்கும் வாழ்வு.


நெருப்புப் படுக்கையில் தூங்கலாம்!

நாளும்

விரக்தியில் தள்ளுகின்ற சூழ்நிலையால்  வாழ்வில்

கலைநயக் கட்டிலும் தூங்கப் பகைதான்!

உளைச்சல் உருளவைக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home